Pages

Sunday 1 November 2009

தீவிரவாத வியாபாரம், முதலீடு மற்றும் லாபங்கள்

பொருளாதார பயங்கரவாதம், தீவிரவாதிகளின் நிதிநிலை: இன்று பொருளாதார
பயங்கரவாதமும், தீவிரவாதிகளின் நிதிநிலை அறிக்கைகளும் சேர்ந்தே
செயல்படுகின்றன. அதற்கு அரசியல்வாதிகளும் ஒத்து போகின்றார்கள். இத்தகைய
புனிதமற்ற கூட்டுக் கொள்ளையில் அப்பாவி சாதாரணமான குடிமக்களின்
கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணம் கொள்ளை போகிறது. அதிலும் மத்திய வர்க்க
குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் துன்பம் சொல்லி மாளாது. தமது
பிள்ளைப் படிப்பு / பெண்ணின் திருமணம் என்று வைத்திருக்கும் பணத்தைப்
போடு நஷ்டமாகி துன்பத்தை அனுபவித்தவர்கள் ஏராளம். இருப்பினும் அரசு
மெத்தனமாகவே செயல்படுவது பல கேள்விகளை எழுப்புகின்றன.

தீவிரவாத வியாபாரம், முதலீடு மற்றும் லாபங்கள்: தீவிரவாத இயக்கங்கள்
குறிப்பிட்ட மதங்கள், மொழிகள் பேசும் மக்கள், முதலியவர்களை மூலை சலவை
செய்து, அவர்கள் தாம் “புனித போரில்” ஈடுபட்டு தம் மக்களைக்
காப்பாற்றுவதற்கு உயிர்த்தியாகம் செய்கின்றனர், மடிகின்றனர். அவதி
படுகின்றனர் என்றெல்லாம் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து, தமது
கட்டுக்குள் வைத்திருக்கும்போது, பணத்தைப் பற்றி கவலையே இல்லை. எப்படி
கடவுளுக்குக் காணிக்கைச் செல்லுத்தப் படுகிறதோ, அதுமாதிரி, பணம்
தீவிரவாதிகளுக்குக் குவிகின்றது.
தீவிரவாத வியாபாரத்தின் பரிணாமக்கள்: மேலும் அவர்கள் போதை மருந்து
கடத்தல் / வியாபாரம், ஆயுத கடத்தல் / வியாபாரம், தொழிற்சாலகளை மிரட்ட்டி
பணம் பறித்தல், தீவிரவாத பயிர்ச்சி முகாம் நடத்துதல், அனைத்துலக
விபச்சாரம், பழங்கால சிலைகள் / சிற்பங்கள் கடத்துதல் முதலிய பல
காரியங்களைத் தொடர்ந்து செய்து வருவதால் அந்தந்த தூரைகளைச் சார்ந்த பலர்
சம்பந்தப் பட்டுள்ளனர். ஏனெனில் அத்தகைய காரியங்களைச் செய்ய அவர்கள்
சுமுகமாக ஒத்துழைக்கவேண்டும், ஆவணங்களை உருவாக்கித் தர வேண்டும், தாம்
குறிப்பிட்ட மனிதர்கள் சென்றுவர அனுமதி அளிக்க வேண்டும். எனவே மாநில
மத்திய அரசாங்க மந்திரிகள் (உடனடியாக மறுத்தல், காலம் கடத்துகள்),
அதிகாரிகள் (சுங்கம், உள்துறை, போலிஸ், உளவுத்துறை), அரசியல்வாதிகள்
(இதில் ஆளும் கட்சி / எதிர் கட்சி பாரபட்வம் இல்லை), சினிமாத் துறையினர்
(தயாரிப்பாளர்கள், நடிகைகள் முதலியோர்).

சிதம்பரம் மாபெரும் பொய்யர்: சிதம்பரம் நிச்சயமாக மிகப்பெரிய பொய்யர்,
ஏனெனில், முன்பு தீவிரவாதிகளின் முதலீடு இந்திய பங்கு சந்தையில் இல்லவே
இல்லை என்று ஒரு போடு போட்டார். ஆனால், மறு தினமே அதற்கு மாறாக செய்திகள்
வந்ததும், ஏதோ இரண்டு கம்பெனிகளின் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து
விட்டதாக தமக்கே உரிய “அரசுத்தரமான” பதிலை கொடுத்து மானத்தை இழந்தார்.
இப்பொழுது உள்-துறை அமைச்சாரகவும் பல செயல்களை செய்து மறைக்கிறார்.
மாவோயிஸ்டுகளுடன் உடன்பாடு கொண்டு, ஒரு போலீஸ் அதிகாரியை மீட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1373: ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு சபை தீர்மானம் 1373 படி எந்த நாடும் மற்ற நாடு / நாடுகளால்
தீவிரவாதிகளின் பணம் உள்ளது, அப்பணம் தீவிரவாத செயல்களுக்கு உபயோகப்
படுத்தப் படும் என்றால் / தகவல் அளித்தால் / புகார் கொடுத்தால், உடனே
அறிவிக்கப் பட்ட நாடு உடனடி நடவடிக்கை எடுத்து அந்த தீவிரவாத
இயக்கங்களின் வங்கி கணக்குகள், முதலீடுகள் அனைத்தையும் முடக்கவேண்டும்.
ஆனால், நம் நாட்டிலேயோ, அதிலும் “செக்யூலரிஸம்” வந்து விடுகிறது. ஆகவே
தெரிந்தும், வேறு பெயர்களில் உள்ள தீவிரவாத கணக்குகளைக் கண்டு
கொள்வதில்லை. இந்த “செக்யூலரிஸ தீவிரவாதம்” தான் பல அப்பாவி மக்களின்
உயிகளைக் குடித்துள்ளது. பல நூறாயிரம் கோடி சொத்துகள் நாசமாகி
இருக்கின்ன. மேலும் பல கோடி வியாபாரம் சீர்கெட்டுள்ளது.

அமெரிக்க எச்சரிக்கை, இந்தியாவின் மெத்தனம்: அமெரிக்கா தனது தீவிரவாத
அறிக்கையில், ஏற்கெனவே எந்தெந்த தடை செய்யப் பட்டுள்ள அமைப்புகள் எப்படி
இந்தியாவில் மாற்று பெயர்களில் இயங்கி வருகின்றன, என்ற விவரங்களைக்
கொடுத்து எச்சரித்து உள்ளது. இருப்பினும் மாறி-மாறி தேர்தல்களை வைத்து
கொண்டு ஆட்சி-அதிகாரத்தைப் பிடிக்க அலையும் க்சங்கிரஸ் அரசு அதைப் பற்றி
கவலைப் படுவதில்லை. பிரச்சினை வரும் போது அறிக்கைகள் விட்டுக் கொண்டு
காலத்தை ஓட்டுகின்றனர். ஒருவேளை, காங்கிரஸ், திராவிட கட்சிகளுடன் கூட்டு
வைத்துக் கொண்டதில் இந்த வித்தஒயை நன்றாகக் கற்றுக் கொணது போலும்.

பங்குகளில் முதலீடு: இப்பொழுது, அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவிரவாத
அமைப்புகள் இந்திய பங்குச் சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி) எச்சரித்துள்ளது.
இதுவே பழைய செய்திதான். இதுபோன்ற முதலீட்டாளர்கள் குறித்து தங்களுக்குத்
தெரிந்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பங்கு
பரிவர்த்தனை மையங்களுக்கும் செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில
தீவிரவாத அமைப்புகள், அதன் தலைமைகள் குறித்த தகவல்களையும் அனைத்து
மையங்களுக்கும் செபி அனுப்பியுள்ளது. "குறிப்பிட்ட எந்த
வாடிக்கையாளராவது, நாங்கள் அனுப்பியுள்ள தகவல்களுடன் ஒத்துப் போவது தெரிய
வந்தால் 24 மணிநேரத்துக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல்
தெரிவிக்க வேண்டும்..." என்று அந்த எச்சரிக்கைக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.

ஊடகங்களின் ஊக்குவிப்பு, மக்களின் இழப்பு: சமீப காலத்தில் தமிழ்
செனல்களில் “பங்கு வர்த்த்ஹகத்தை”ப் பற்றி அதிகமாகவே நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பப் படுகின்றன. ஒருசிலரைத் தவிர, பெரும்பாலோர் ஏதோ வானிலை அறிக்கை
அல்லது சோதிடம் மாதிரி, இருக்கின்ற எல்லாம் சாதக-பாதஜங்களைக்
குறிப்பிட்டு குழப்புகிறார்களேத் தவிர தெளிவாக, குறிப்பாக எதையும்
சொல்வதில்லை. இருப்பினும் அத்தகைய வலுக்கட்டாஅயமான பிரச்சாரத்தில்
தெரிவது, பொது மக்களை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யுங்கள் என்ற
அறிவுரைதான். இதனால், விஷயம் அறியாதவர்கள் எல்லாம், தங்களது பணத்தை இதில்
கொட்டுகின்றனர். ஆனால், லாபமடைவது, மறைமுகமாக தீவிரவாதிகளே.

பணம் கொடுப்பது யார்? சர்வதேச பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்
தீவிரவாதிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிம், எல்.டி.டி.ஈ, அல்-குவைதா,
உல்ஃபா, சிமி, ஜெய்சி-முஹமது மாற்றும் பல பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத்
தெரிகிறது. தாலிபானிற்கு பணம் கொடுப்பது சௌதி அரேபியா, பாகிஸ்தான், இரான்
மற்றும் பாரசிக வளைகுடா நாடுகளின் குறிப்பிட்ட மக்களே. $ 106 மில்லியன்
(ரூ. 5300 கோடிகள்) தாலிபானிற்கு 2008ல் ககதைத்துள்ளது! அதேமாதிரி,
எல்.டி.டி.ஈக்கு பணம் கொடுப்பது கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் உள்ள
குறிப்பிட்ட நபர்களே. இதில், ஒரு தீவிரவாத அமைப்பிலிருந்து மற்ற தீவிரவாத
அமைப்புகளுக்கு கொடுக்கல்-வாங்கல் / பண்டம் மாற்று முறைகளும் உண்டு.
ராஜரத்னம் தடை செய்யப் பட்ட தமிழ் மறுவாழ்வு நிறுவனத்திற்கு [Tamil
Rehabilitation Organization (TRO)] $ 3.3 மில்லியன்கள் (ரூ. 165
கோடிகள்) மேலாகக் கொடுத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. இது நவம்பர்
2007ல் தடை செய்யப்பட்டு, கணக்குகள் முடக்கப் பட்டன.

மின்னஞ்சலில் எனக்கு வந்த தகவல் இது...

No comments:

Post a Comment