Pages

Saturday, 6 March 2010

மூன்று மாத இடைவெளிக்கு பின்......


இந்த மூன்று மாதம்... பெருசா ஒன்னும் பன்னால, ஆனால் ப்ளோகில் இடுகை இட முடியவில்லை... சென்னை போய் வேலை தேடி அடிபட்டு வீட்டுக்கு வந்தது தான் மிச்சம்.... 

இனி இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இடுகை இட முயற்சிக்கிறேன்....

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த நித்தியானந்த பத்தி எழுதுறத நிறுத்துங்கப்பா... வடிவேலு ஸ்டைல்-ல சொன்னா 'முடியல'....

இப்படிக்கு உங்கள் ஆதரவை விரும்பும் 

இரா.சுரேஷ் பாபு

Thursday, 19 November 2009

இந்தியாவின் முதல்10 பணக்காரர்கள் பட்டியல்

1.முகேஷ் அம்பானி - $32 பில்லியன்
2.மிட்டல் - $30 பில்லியன்
3.அணில் அம்பானி- $17.5 பில்லியன்
4.அசிம் பிரேம்ஜி- $14.9 பில்லியன்
5.சாஷி மற்றும் ரவி ரியா- $13.6 பில்லியன்
6.குஷால் பால் சிங் - $13.5 பில்லியன்
7.சாவித்திரி சின்டல் - $12 பில்லியன்
8.சுனில் மிட்டல் - $8.2 பில்லியன்
9.குமார் மங்களம் பிர்லா- $7.8 பில்லியன்
10.கெளதம் அடானி  - $6.4 பில்லியன்

Tuesday, 3 November 2009

தெரிந்து கொள்ளவும் : என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும்

வைட்டமின் A:
இது, குறைந்தால் கண் பார்வை மங்கும். நோயெதிர்ப்பு சக்தி குறையும்.கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு,ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம்.

வைட்டமின் B:

 இது குறைந்தால் வயிற்று மந்தமும் அஜீரணமும் ரத்த சோகையும் ஏற்படலாம்.பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம். வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.

வைட்டமின் C :

 இது குறைந்தவர்கள் மனஅமைதி இழப்பர். சிடுமூஞ்சியாக இருப்பர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்காய்கறிகள், நெல்லிக்காய்,எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை,வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் C வைட்டமின் அதிகம்.



வைட்டமின் D :

வைட்டமின் ‘D’ இல்லாவிட்டால், எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் ‘D’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.



போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் ‘D தயாரித்துவிடும். முட்டை, மீன், வெண்ணெய், ஆகியவற்றிலும் D வைட்டமின் உள்ளது.



வைட்டமின் E :

இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். E வைட்டமின் இல்லாவிட்டால் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.

கோதுமை, கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் எ கிடைக்கும்.


புரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்:

1. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.

2. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.

3. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.

4. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)

5. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.



வைட்டமின்கள்

1.மீன், மீன்எண்ணெய்: வைட்டமின் A,D கிடைக்கும். கருவரை, குழந்தை வளர, எலும்பு வளர பல் உறுதிபட.

2. முட்டை : A,B,D வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு, பற்கள் உறுதியாக, குழந்தை வளர.

3. கீரை : E வைட்டமின் அதிகம் தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற.

4. முட்டைக் கோஸ்: A,B,E வைட்டமின் உள்ளன. கண் பார்வை கூடும். வாய்ப் புண், குடல் புண் சீராகும்.


5. ஆரஞ்சு, திராட்சை: C வைட்டமின் அதிகம். எலும்பு, பல் ஈறு பலம் பெரும்

Sunday, 1 November 2009

இந்தியா -ஆஸ்திரேலியா நான்காவது ஒரு நாள் போட்டி முன்னோட்டம்

இன்று இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் இடையே நான்காவது ஒரு நாள் போட்டி மொஹலியில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.. கடைசி இரண்டு போட்டியில் வென்ற தெம்புடன் இந்திய அணியும், ஜெயித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா அணியும் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

கடந்த போட்டியில் கம்பீர் சேவாக் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டதால் இன்று விளையாடுவது சந்தேகமே.. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு...

ஆஸ்திரேலியா அணியில் ஹுஸ்ஸேய், போண்டிங் நல்ல போர்மில் உள்ளனர்.


இந்த போட்டியில் சச்சின் மேலும் 47 ரன்கள் சேர்த்தால் 17000 ரன்களை கடத்து சாதனை புரிவார்.இந்திய அணிக்கு கவலையே பௌளிங்கும் பீல்டிங்கும் தான்..

பிட்ச் பேட்டிங்கிக்கு சாதகமாக இருப்பதால் டாஸ் வேலும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்ந்தேடுக்கும் .. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தரவரிசையில் முதல் இடத்தை மீண்டும் பிடிக்கும்.